/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓணம் பண்டிகை: ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
/
ஓணம் பண்டிகை: ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
ADDED : செப் 06, 2025 04:13 AM

பெரியகுளம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பன் கோயில்களில் சிறப்புபூஜை நடந்தது
பெரியகுளம் தென்கரை பாலசாஸ்தா கோயிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஐயப்பனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், நெய் உட்பட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஐயப்பன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பூஜைகளை அர்ச்சகர் பிரசன்ன வெங்கடேசன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
போடி: ஐயப்பன் கோயிலில் ஐயப்ப பக்த சபை, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஐயப்பனுக்கு மலர் அலங்காரத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. குருநாதர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
தலைவர் ஹரிஹரன், செயலாளர் சேதுராம், பொருளாளர் கருப்பையா, துணைத் தலைவர்கள் சுந்தரம், ராஜாமணி, துணைச் செயலாளர்கள் மணிகண்டன், சன்னாசி முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை கமலக்கண்ணன் பட்டாச்சாரியார் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் தரிசனம் பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன.