/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியை எட்டியது கரையோரப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை
/
பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியை எட்டியது கரையோரப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை
பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியை எட்டியது கரையோரப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை
பெரியாறு அணை நீர்மட்டம் 135 அடியை எட்டியது கரையோரப் பகுதியில் வசிப்போருக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 02:30 AM

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் நீர்மட்டம் 135 அடியை எட்டியது. தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறக்கும் வாய்ப்புள்ளதால் தேனிமாவட்டம் லோயர்கேம்பில் துவங்கும் முல்லை ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியை தாண்டியது. நேற்று காலை 133.65 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று மாலை நிலவரப்படி 135 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). தமிழகப் பகுதிக்கு நீர் திறப்பு 1867 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 5551மில்லியன் கன அடி. பெரியாறில் 84.40 மி.மீ., தேக்கடியில் 43.4 மி.மீ., மழை பதிவானது.
இடுக்கி மாவட்டத்தில் கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்து 136 அடியை எட்டும் வாய்ப்புள்ளது. அணையில் 142 அடி தேக்க வாய்ப்பு இருந்தும் ரூல் கர்வ் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும்.
இந்நிலையில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதை தொடர்ந்து 136 அடியை எட்டுவதற்குள் தமிழக பகுதிக்கு தற்போது திறக்கப்பட்டுள்ள நீர் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதனால் லோயர்கேம்பில் துவங்கி வீரபாண்டி வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்ஸ்:
ரூல்கர்வ் விதிமுறைப்படி அணையில்
தேக்க வேண்டிய நீர்மட்ட அளவு:
ஜூன் 30 வரை 136 அடி
ஜூலை 31 வரை 137 அடி
ஆக.31 வரை 139.8 அடி
செப். 30 வரை 140 அடி
அக். 31 வரை 138 அடி
நவ. 30 வரை 142 அடி
டிச.1 முதல் மே 31 வரை 142 அடி