sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி

/

விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி

விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி

விவசாயி இறப்பில் மர்மம் - போலீசார் விசாரணை; பாம்பு கடித்து பெண் பலி


ADDED : பிப் 22, 2024 06:05 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே உப்புத்துறையைச் சேர்ந்தவர் சேதுராமன் 27. விவசாயி. இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்து, மகன் உள்ளார். நேற்று காலை சேதுராமன் ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்க தாழையூத்து கிராமத்திற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் சேதுராமன் அப்பகுதி மலை அடிவாரத்தில் மயக்க நிலையில் கிடப்பதாக, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற உறவினர்கள் அவரை மீட்டு கடமலைக்குண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தலையில் லேசான காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தனர்.

இதனை தொடர்ந்து சேதுராமன் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகளுக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us