sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்......

/

போலீஸ் செய்திகள்......

போலீஸ் செய்திகள்......

போலீஸ் செய்திகள்......


ADDED : மார் 17, 2025 07:58 AM

Google News

ADDED : மார் 17, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகராறு நால்வர் மீது வழக்கு

தேனி: பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெரு விவசாயி முருகதாஸ் 46. இவருக்கும், இவரது உறவினர் ஆசைக்குமாருக்கும் பூர்வீக நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் பிரச்னைக்கு உரிய நிலத்தில் இருந்த மரத்தை ஆசைக்குமார் வெட்டினார். இதனை முருகதாஸ் தட்டிக்கேட்டார். இந்த பிரச்னையில் ஆசைக்குமார் கொலை மிரட்டல் விடுத்தார். இவரது மனைவி கலா, மகன்கள் பரத், சிவா ஆகியோர் திட்டினர். முருகதாஸ் புகாரில் நால்வர் மீது வழக்கு பதிந்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

டூவீலர் திருட்டு

தேனி: பழனிசெட்டிபட்டி பைசல் 36. இவர் போடி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் உள்ள டீ கடையில் பணிபுரிகிறார். கடை முன் டூவீலரை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us