sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள்...

/

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...


ADDED : ஏப் 03, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டூவீலர் திருட்டு

தேனி: பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெரு முத்துப்பாண்டி 38. இவர் பூதிப்புரம் ஆயில் மில்லில் தொழிலாளியாக உள்ளார். தனது தந்தையின் டூவீலரை பயன்படுத்தி வந்தார். கடந்த மார்ச் 19ல் டூவீலரை, வீட்டின் அருகே நிறுத்திவிட்டு, வெளியூர் சென்றார். மீண்டும் ஏப். 1ல் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் காணவில்லை.

கணவனை பிரிந்த பெண் மாயம்

தேனி: கருவேல்நாயக்கன்பட்டி கலெக்டர் ஆபீஸ் முதல் தெரு பாக்கியராஜ் 32. இவரது மனைவி ரேணுகாதேவி 27.இத்தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் கருத்துவேறுபாடால் கணவனை விட்டு பிரிந்த ரேணுகாதேவி, தந்தை ராஜாங்கம் வீட்டில் வசிக்கிறார். டைல்ஸ் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சென்றார். நேற்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. போலீசார் தேடி வருகின்றனர்.

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

தேனி: பங்களாமேடு நகராட்சி கட்டண கழிப்பறை அருகே எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது போடி சிங்கராஜபுரம் ஆசை 45, ரூ.1740 மதிப்புள்ள 24 மது பாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். ஆசையை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us