sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

போலீஸ் செய்திகள் தேனி

/

போலீஸ் செய்திகள் தேனி

போலீஸ் செய்திகள் தேனி

போலீஸ் செய்திகள் தேனி


ADDED : ஏப் 20, 2025 04:45 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணிடம் செயின் பறிப்பு

தேனி: அரண்மனைப்புதுார் முத்தாலம்மன் கோயில்தெரு நவித்ரா 30. இவர் டூவீலரில் வயல்பட்டிக்கு சென்று வீடு திரும்பினார். சத்திரப்பட்டி அருகே அடையாளம் தெரியாத டூவீலரில் வந்த ஒரு நபர், நவீத்ராவை கீழே தள்ளினார். கவரிங் செயினை பறித்து சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற இருவர் கைது

தேனி: தேனி-போடி ரோட்டில் தீர்த்த தொட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த பாலார்பட்டி சுகுமாறன் 30, தேவாரம் ராஜ்குமார் 33 ஆகியோரை விசாரித்தனர். அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். விசாரணையில் சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

தேனி: பூதிப்புரம் பகுதியில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., ஜீவானந்தம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் உள்ள கட்டண கழிப்பறை அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டிருந்த மஞ்சிநாயக்கன்பட்டி பெருமாள் 50, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பஸ் கண்ணாடி சேதம்

தேனி: ஆண்டிபட்டி அனுப்பபட்டி பாண்டி 42, கம்பம் அரசு டெப்போ பஸ் டிரைவர். இவர் தேனியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி அரசு பஸ்சை ஓட்டி சென்றார். பஸ் தேனி அரசு ஐ.டி.ஐ., அருகே சென்ற போது, இவருக்கு பின்னால் சரக்கு வாகனத்தை ஒடைப்பட்டி நன்மாறன் ஓட்டி சென்றார். பஸ்சை முந்த முயற்சித்த போது, பஸ் முன்பகுதியில் சரக்கு வாகனம் மோதியது. இதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது. தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பதுக்கிய இருவர் கைது

போடி: டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் முபாரக் 60. இவரது பெட்டி கடையில் அனுமதி இன்றி தடை செய்யப்பட்ட 6 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். இது போல கொக்கையர் பள்ளி அருகே வசிப்பவர் கண்ணன் 26. இவரது பெட்டி கடையில் அனுமதி இன்றி 35 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார்.போடி டவுன் போலீசார் முபாரக், கண்ணன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 41 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மது பதுக்கிய இருவர் கைது

போடி :அருகே ராசிங்காபுரம் சிங்காரவேல் தெருவை சேர்ந்தவர் பாரதி 36. இவர் அனுமதி இன்றி 15 மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். போடி அருகே விசுவாசபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் 46. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 10 மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தார். போடி தாலுாகா போலீசார் பாரதி, வேல்முருகன் இருவரையும் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us