விஷம் குடித்து
தற்கொலை
சின்னமனூர்:சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி 54, இவரது மனைவி முருகேஸ்வரி 50, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் முத்துச்சாமி மது பழக்கத்திற்கு அடிமையானார். தொடர்ந்து மது குடித்து வந்ததால் வலிப்பு நோய் வந்தது. இதனால் மனம் உடைந்த முத்துச்சாமி சின்னமனூர் வாரச்சந்தைக்கு பின்புறம் விஷம் அருந்தினார். தகவலின் பேரில் மனைவி, அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ கவிழ்ந்து பெண்கள் காயம்தேனி: சின்னமனுார் ஐயப்பன் கோவில் தெரு கலாவதி, இவரது மகள் சரண்யா. இவரும் ஆட்டோவில் பெரியகுளம் ரோட்டில் மருத்துவமனைக்கு சென்றனர். ஆட்டோவை போடி மீனாட்சிபுரம் வசந்த் ஓட்டினார். சந்ததை மாரியம்மன் கோவில் அருகே சென்ற போது டிரைவர் ஆஜாக்கிரதையால் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் கலாவதி, சரண்யா காயமடைந்தனர். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கலாவதி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருட்டுதேனி: அம்மாபட்டி குடிசைமாற்று வாரிய குடியிருப்பு சந்தோஷ் 27. இவர், இவர் மனைவி இருவரும் பெரம்பலுாரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இவர்கள் வீட்டில் இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வியாபார பொருட்கள், தொலைக்காட்சி, பாத்திரங்கள் திருடு போயின. சந்தோஷ் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ்காரர்
மீது வழக்கு-
தேனி: பழனிசெட்டிபட்டி அரசு நகர் செல்வேந்திரன் 57. இடம்தொடர்பாக இவரது அண்ணன் ஜெயசந்திரன் குடும்பத்துடன் பிரச்னை இருந்தது. இந்நிலையில் பாலார்பட்டியில் ஏற்பட்ட தகராறில் ஜெயசந்திரன் இவரது மகன்கள் பாரத்தசாரதி, இன்பசேரன் ஆகிய மூவரும் செல்வேந்திரனை தாக்கினர். செல்வேந்திரன் புகாரில் ஜெயசந்திரன், அவரது இருமகன்கள் என மூவர் மீதும் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதில் பார்த்தசாரதி பழநி பட்டாலியன் போலீஸ்காரராக உள்ளார்.