sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெல் கொள்முதலில் சுணக்கம் தனியார் வியாபாரிகள் ஆர்வம்

/

நெல் கொள்முதலில் சுணக்கம் தனியார் வியாபாரிகள் ஆர்வம்

நெல் கொள்முதலில் சுணக்கம் தனியார் வியாபாரிகள் ஆர்வம்

நெல் கொள்முதலில் சுணக்கம் தனியார் வியாபாரிகள் ஆர்வம்


ADDED : மார் 17, 2024 06:31 AM

Google News

ADDED : மார் 17, 2024 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம்: நெல் கொள்முதலில் அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சுணக்கம் காட்டி வரும் நிலையில் தனியார் வியாபாரிகள் கொள்முதலில் ஆர்வம் காட்டுகின்றனர்.

மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது.தமிழக அரசின் நுகர்பொருள் வாணிய கழகம் ஆண்டுதோறும் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனுாரில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு தற்போது இரண்டாம் போக நெல் அறுவடை கம்பம், சின்னமனூர் பகுதிகளில் முடியும் தருவாயில் உள்ளது.

தனியார் வியாபாரிகள் ஒரு மாதமாக கம்பம், சின்னமனூரில் முகாமிட்டு கொள்முதல் செய்துள்ளனர்.

அரசின் சார்பில் சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ.2203, தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.107 ஐ சேர்த்து ரூ.2310 ம், பொது ரகங்கள் குவிண்டாலுக்கு ரூ.2183, ஊக்கத் தொகை ரூ.82 சேர்த்து ரூ.2265 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாதமாக அரசு நிர்ணய விலையை விட அதிகம் விலைக்கு கொள்முதல் செய்து விட்டனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பே நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என மண்டல மேலாளர் அறிவித்தார்.

ஆனால் இது வரை கம்பம் உள்ளிட்ட ஊர்களில் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இனி திறந்தும் பெரிய அளவில் விவசாயிகளுக்கு பயன் இல்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.






      Dinamalar
      Follow us