/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புரட்டாசி சனி வார விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
புரட்டாசி சனி வார விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனி வார விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி சனி வார விழா: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : அக் 12, 2025 06:35 AM

போடி : புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன.
போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
பெரியகுளம் : வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது. பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட 16 வகையான பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டு ஆடைகள் உடுத்தி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் வரதராஜப் பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
உற்ஸவர் கருடசேவை அலங்காரத்தில் காட்சியளித்தார். மூலவர் மகாலட்சுமி அலமேலு மங்கா பத்மாவதி அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார்.
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை துளசி அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண சைதன்யதாஸ் செய்திருந்தார். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.