sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

58ம் கால்வாயில் நீர் வெளியேற்றம் குறைப்பு

/

58ம் கால்வாயில் நீர் வெளியேற்றம் குறைப்பு

58ம் கால்வாயில் நீர் வெளியேற்றம் குறைப்பு

58ம் கால்வாயில் நீர் வெளியேற்றம் குறைப்பு


ADDED : நவ 07, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 07, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணை நீர்மட்டம் குறைவதால் 58ம் கால்வாயில் வெளியேறும் நீரின் அளவும் குறைகிறது.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல கால்வாய் வசதி உள்ளது. வைகை அணை நீர் மட்டம் 67 அடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே கால்வாய் மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். அணை நீர்மட்டம் அக்.29ல் 69.46 அடியாக இருந்த நிலையில் 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டது.

ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், மாவட்டங்களின் பாசனத்திற்கு நீர் வெளியேறியதால் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்தது. தற்போது அணை நீர்மட்டம் 67.65 அடியாக குறைந்துள்ளதால் 58ம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரின் அளவும் வினாடிக்கு 70 கனஅடியாக குறைந்துள்ளது.

அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்தால் மட்டுமே 58ம் கால்வாய் வழியாக கூடுதல் நீர் வெளியேற்ற முடியும். நேற்று அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக வினாடிக்கு 935 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறியது. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1793 கன அடி.






      Dinamalar
      Follow us