/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வு! 35 மெகாவாட்டை 42 ஆக உயர்த்த நடவடிக்கை
/
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வு! 35 மெகாவாட்டை 42 ஆக உயர்த்த நடவடிக்கை
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வு! 35 மெகாவாட்டை 42 ஆக உயர்த்த நடவடிக்கை
சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தியை அதிகரிக்க ஆய்வு! 35 மெகாவாட்டை 42 ஆக உயர்த்த நடவடிக்கை
ADDED : ஆக 30, 2024 06:05 AM

கம்பம் : சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்க மின்வாரிய அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வை துவக்கியுள்ளனர். குறைந்த அளவு தண்ணீரில் அதிக மின்சாரம் எடுக்க முடியும் என்பதால், இந்த ஆய்வை துவக்கியுள்ளதாக தெரிகிறது.
மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று, நிலக்கரி, அணு மின் நிலையம் என பல வழிகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.
தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப், சுருளியாறு நீர் மின் நிலையங்கள் உள்ளன.
லோயர் கேம்ப் மின் நிலையத்தில் 168 மெகாவாட் உற்பத்தி நடைபெறுகிறது. 4 ஜெனரேட்டர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் என்பது, 42 மெகாவாட்டாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திறன் அதிகரிக்கப்பட்டது. 140 மெகாவாட்டாக இருந்தது தற்போது 168 மெகாவாட் என திறன் உயர்த்தப்பட்டது.
ஆனால் சுருளியாறு மின் நிலையத்தில் கடந்த 1978 ல் இருந்து 35 மெகாவாட் என்ற நிலையில் உள்ளது.
நீர் மின் உற்பத்தியை பொறுத்தவரை, தண்ணீர் வரும் உயரம் முக்கிய காரணியாகும். லோயர்கேம்ப்பில் 35 மெகாவாட் உற்பத்திற்கு 400 கன அடி தண்ணீர் தேவைப்படும். ஆனால் சுருளியாறு நிலையத்தில் 35 மெகாவாட் உற்பத்தி செய்ய 141 கன அடி போதுமானது.
காரணம் சுருளியாறு மின் நிலையத்தில் 971 மீட்டர் உயரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
எனவே சுருளியாறு மின் நிலையத்தில் உற்பத்தி திறன் 35 மெகாவாட் என்பதை 42 மெகாவாட்டாக உயர்த்த நீண்ட காலமாக திட்டம் இருந்தது. தற்போது வாரிய அதிகாரிகள் அதற்கான ஆய்வை துவக்கி உள்ளனர்.