ADDED : செப் 29, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வீரபாண்டியில் தனியார் மண்டபத்தில் ஹிந்து எழுச்சி முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ராமராஜ் தலைமையில் நடந்தது.
நிறுவனத் தலைவர் பொன்ரவி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் கோவிந்தராஜ், லோகநாதன், செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும். தேனி மதுரை ரோட்டில் ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சுருளி அருவி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.