/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மஞ்சளாறு அணையில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
/
மஞ்சளாறு அணையில் மூழ்கி பள்ளி மாணவர் பலி
ADDED : ஜூன் 18, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கலைச்செல்வன் 51. இவரது மகன் சந்தோஷ் 15. தேவதானப்பட்டி பகுதியில் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
தனது நண்பர்களுடன் மஞ்சளாறுஅணைப்பகுதியில் கிரிக்கெட் விளையாடினார். தண்ணீரில் பந்து விழுந்தது.
இதனை எடுக்கச் சென்ற சந்தோஷ் தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் சந்தோஷை காப்பாற்றி கரையில் சேர்த்தனர்.
ஆம்புலன்ஸ் செவிலியர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது சந்தோஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.-