ADDED : ஆக 03, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் சின்ன வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் 50 இப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
இதே பகுதியில் வசிப்பவர் பால்பாண்டி மற்றும் கண்ணன். இவர்கள் இருவரும் சத்தம் போட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை பார்த்த ரமேஷ், இருவரும் சண்டை போடாதீர்கள் என்று கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து தென்னை மட்டையால் ரமேஷை தாக்கியுள்ளனர். பின்னர் பால்பாண்டி வைத்திருந்த அரிவாளால் ரமேஷின் தலையில் வெட்டியுள்ளார். புகாரில் கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்

