/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வெள்ளம் இழுத்துச்சென்ற இருவரை தேடும் பணி தீவிரம்
/
வெள்ளம் இழுத்துச்சென்ற இருவரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஆக 04, 2025 12:34 AM
போடி; கேரளாவில் பெய்த கன மழையால் குரங்கணி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்.
போடி பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜஹாங்கீர் 47. மதுரை வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மஜீத் 52. இவர்கள் உட்பட ஏழு பேர் குடும்பத்தினருடன் நேற்று குரங்கணி மேல் பகுதி நரிப்பட்டி சொக்கன் கேணி அருகே குளித்துக் கொண்டிருந்தனர்.
கேரளாவில் பெய்த கன மழையால் குரங்கணி பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் வந்துள்ளது.
இதில் ஆற்றை கடக்க முடியாமல் ஏழு பேரும் தவித்துள்ளனர். இந்நிலையில் வெள்ள நீரை கடக்க முயன்ற ஜஹாங்கீர், மஜீத்தை வெள்ள நீர் இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்த போடி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றை கடக்க முடியாமல் தவித்த ஐந்து பேரை மீட்டனர்.
இழுத்துச் செல்லப்பட்ட ஜஹாங்கீர், மஜீத் நிலை தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.