ADDED : அக் 29, 2025 09:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேனி மாவட்டம், சண்முகா நதி அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது.
இதுகுறித்து, நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்தேக்க திட்டத்தின் கீழ், உத்தமபாளையம் வட்டத்தை சேர்ந்த புஞ்சை நிலங் களுக்கு பயன்படும் வகையில், இன்று முதல் நீர் திறக்கப்படுகிறது. வினாடிக்கு 14.4 கனஅடி வீதம், 62.6 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள, 1,640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

