sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்

/

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்

கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் நடந்த சுவாமி திருக்கல்யாணம்


ADDED : மே 09, 2025 05:52 AM

Google News

ADDED : மே 09, 2025 05:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் 7ம் நாளில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

யாகசாலை பூஜை, கும்ப பூஜை மற்றும் பூர்ணாகுதி நிகழ்ச்சிகளுக்கு பின் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. எம்.எல்.ஏ., மகாராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலில் பக்தர்களுக்கு திருமண விருந்து நடந்தது. நாளை (சனிக்கிழமை) சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் மே 11, 12 தேதிகளில் தேரோட்டமும் நடைபெறும்.






      Dinamalar
      Follow us