sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி குமுளியில் நாளை உண்ணாவிரதம் - எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்

/

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி குமுளியில் நாளை உண்ணாவிரதம் - எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி குமுளியில் நாளை உண்ணாவிரதம் - எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்

பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி குமுளியில் நாளை உண்ணாவிரதம் - எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக விவசாயிகள்


ADDED : பிப் 01, 2025 02:15 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி நாளை கேரளா ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு சார்பில் குமுளியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த 2014ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் பேபி அணையை பலப்படுத்தி பின் நீர்மட்டத்தை 152 அடியாக்கிக் கொள்ளலாம் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. தீர்ப்பின் அடிப்படையில் நீர்மட்டமும் 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பேபி அணையை பலப்படுத்திய பின் மீண்டும் 152 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இதை ஏற்றுக் கொள்ளாத கேரள அரசு பேபி அணை பலப்படுத்த இடையூறு செய்வதுடன், கேரளாவில் நடக்கும் போராட்டங்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அனுமதி வழங்கி வருகிறது. பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை என்ற கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகிறது. அணை எந்த நேரத்திலும் உடையலாம் என்ற அச்சத்தையும் கேரள மக்களிடம் தொடர்ந்து பரப்பி வருகிறது.

நாளை (பிப். 2) கேரளாவில் உள்ள ஜனநாயக உரிமை பாதுகாப்பு குழு அணை நீர்மட்டத்தை142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி குமுளியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.

இரு மாநில உறவை சீர்குலைக்கும்


அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்: 2011ல் அணைப்பிரச்னை தொடர்பாக தமிழக-- -கேரள மாநிலங்கள் இடையே பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த போது, தமிழக விவசாயிகள் குமுளியில் இருந்து 6 கி.மீ., துாரமுள்ள லோயர்கேம்ப் வரை மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் கேரளாவில் வண்டிப்பெரியாறு வரை மட்டுமே கேரள தரப்பு மக்கள் போராட்டம் நடத்த உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இதை மீறி எல்லையை ஒட்டி குமுளியில் நாளை உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகின்றனர். சமீபத்தில் கேரள அட்வகேட் ரசூல் ஜோயும் குமுளியில் இப்பிரச்னை தொடர்பான கூட்டத்தை நடத்தியுள்ளார். இது இரு மாநில உறவை சீர்குலைக்கவழி வகுக்கும். நாளை குமுளியில் கேரள அமைப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினால் தமிழக விவசாயிகளும் அன்றைய தினமே குமுளி எல்லை வரை சென்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம் என்றார்.






      Dinamalar
      Follow us