/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர் திராட்சை ஏற்றுமதிக்கு தொழில்நுட்ப ஆலோசனை தோட்டக்கலைத்துறை விளக்கம்
/
பன்னீர் திராட்சை ஏற்றுமதிக்கு தொழில்நுட்ப ஆலோசனை தோட்டக்கலைத்துறை விளக்கம்
பன்னீர் திராட்சை ஏற்றுமதிக்கு தொழில்நுட்ப ஆலோசனை தோட்டக்கலைத்துறை விளக்கம்
பன்னீர் திராட்சை ஏற்றுமதிக்கு தொழில்நுட்ப ஆலோசனை தோட்டக்கலைத்துறை விளக்கம்
ADDED : செப் 20, 2024 06:32 AM
கம்பம்: பன்னீர் திராட்சையை குளிர்பதன கிட்டங்கியில் வைத்து ஏற்றுமதி செய்ய விவசாயிகள் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து தோட்டக்கலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் பெரும்பாலான கிராமங்களில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் கணிசமாக விதையில்லா திராட்சை சாகுபடியாகிறது. ஆண்டு முழுவதும் திராட்சை விளையும் பகுதி என்ற பெயர் பெற்றது.
மாவட்டத்திலிருந்து வாழை, காய்கறிகள் கொச்சி,தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதியாகிறது.
பன்னீர் திராட்சைக்கு வெளிநாடுகளில் தேவை இருந்தும் , தொழில் நுடபம் தெரியாததால் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. பன்னீர் திராட்சை ஏற்றுமதி செய்ய விவசாயிகள் என்ன தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
ஆலோசனையில் பன்னீர் திராட்சை பழ அறுவடையை காலை 6:30 மணியிலிருந்து காலை 11:00 மணிக்குள் செய்திட வேண்டும். பழக் கொத்தை அறுப்பதற்கென பிரத்யேக கத்தரியை பயன்படுத்த வேண்டும்.
பழக் கொத்தில் தடிமனான பகுதியில் அறுக்க வேண்டும். அவ்வாறு அறுப்பதால் பழத்தில் ஈரப்பதம் குறையாது. பழத்தின் எடையும் குறையாது.
குளிர்பதன கிட்டங்கியில் 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்க வேண்டும். ஈரப்பதம் 80 முதல் 85 சதவீதம் இருக்க வேண்டும். பழத்தை அறுவடை செய்து டிரேயில் வைக்கும் போது, ஒன்றின் மீது ஒன்றாக அடுக்க கூடாது.
தனித் தனியாக டிரேக்களை வைக்க வேண்டும். பழங்கள் அறுவடை செய்த 2மணி நேரத்திற்குள் குளிர்பதன கிட்டங்கிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தோட்டக்கலைத்துறை சார்பில் சிப்பம் கட்டும் அறை கட்ட ரூ.2 லட்சம் மானியம் வழங்குகிறது. விவசாயிகள் பயன்படுத்தி தோட்டங்களில் சிறிய அளவில் குளிர்பதன அறைகள் கட்டலாம்.
இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பன்னீர் திராட்சையை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றனர்.