ADDED : செப் 19, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி காலனிதெருவைச் சேர்ந்தவர் சின்னகருப்பு 52. இவரது நண்பர் ராஜாராம் 54. இருவரும் கைலாசபட்டி காலனி பிரிவு அருகே முட்புதரில் 91 மது பாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தனர்.
தென்கரை எஸ்.ஐ., செந்தில்குமார், மதுபாட்டில்களை கைப்பற்றி, ராஜாராமை கைது செய்து, மது விற்ற ரூ.300யை கைப்பற்றினர். தப்பியோடிய சின்னகருப்பை தேடி வருகின்றனர்.-