/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவதுாறாக பேசியவர் நீதிமன்ற உத்தரவில் கைது
/
அவதுாறாக பேசியவர் நீதிமன்ற உத்தரவில் கைது
ADDED : ஆக 22, 2025 02:45 AM

தேனி: 'குறிப்பிட்ட சமுதாயத்தை அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, முத்துக்காமாட்சி 51, பெரியசாமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவில் போலீசார் வழக்குப்பதிந்து தேடினர். இருவம் தலைமறைவாகினர். நேற்று முத்துக்காமாட்சி முன்ஜாமின் கோரிய போது அவரை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி மேலத்தெரு முத்துக்காமாட்சி.
ஜெயமங்கலத்தைச் சேர்ந்த இவரது நண்பர் பெரியசாமி. இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சமுதாயத்தை அவதுாறாக பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதனால் ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்த தவமணிராஜா புகாரில், ஜெயமங்கலம் போலீசார் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஜூலை 16ல் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இருவரும் தலைமறைவாகினர்.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்துக்காமாட்சி முன்ஜாமின் வழக்க கோரி அளித்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கீழமை நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. இதனால் நேற்று முன்ஜாமின் கோரி தேனி வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முத்துக்காமாட்சி மனு அளித்தார்.
மனுவை பரிசீலித்த நீதிபதி அனுராதா, உடனடி முன் ஜாமின் வழங்க முகாந்திரம் இல்லாததால், கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் முத்துக்காமாட்சியை கைது செய்து பெரியகுளம் கிளைச் சிறையில் அடைத்தனர்.