ADDED : பிப் 01, 2024 04:32 AM
கடமலைக்குண்டு |: தேவராஜ் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் மலைச்சாமி 38. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த பிரியா 29,க்கும்12 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
குடிப்பழக்கத்தால் கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.
பிரியா தனது இரு மகன்களுடன் அவரது அப்பா திருப்பதி வீட்டில் இருந்தார். கடந்த ஜனவரி 27ல் மனைவியை பார்க்க வந்த கணவர் பிரியா வீட்டில் உடன் இருந்துள்ளார். இரவில் தனது வீட்டிற்கு செல்வதாக கணவர் கூறி சென்றுள்ளார். மறு நாள் விஷம் குடித்துவிட்டு வீட்டின் அருகில் உட்கார்ந்திருந்தார்.
விபரம் தெரிந்த அப்பகுதியில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். மனைவி பிரியா புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.