ADDED : அக் 26, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் காலனித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி மேகலா 31. வீட்டு வாசலில் நின்றிருந்த மேகலாவை, இதே ஊர் மேட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் அனித்குமார் 27.மது போதையில் அரிவாளை மேகலாவிடம் காட்டி உன்னையும், உனது கணவரையும் கொலை செய்வேன் என மிரட்டியுள்ளார்.
இதற்கு மேகலா ஏன் இப்படி அவதூறாக பேசுகிறீர்க என கேட்டதற்கு, அனித்குமார் மேகலா சேலையை பிடித்து இழுத்து அடித்துள்ளார். ஜெயமங்கலம் சிறப்பு எஸ்.ஐ., கோபிராஜா, அனித்குமாரை கைது செய்தார்.-