ADDED : ஜன 30, 2024 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்த பீர்முகமது 26. குடும்பத்துடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று விட்டு, ஊருக்கு திரும்பிய போது வீட்டில் பீரோ மேற்புறம் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 5 பவுன் தங்க ஆரம் நகையும், தலா 4 கிராம் தங்க மோதிரம் மூன்று காணவில்லை. ஆனால் பீரோ உடைக்கவில்லை.
நூதனமாக திருடிய மர்ம நபரை தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன் தேடி வருகிறார்.