நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி:கோத்தலூத்தில் விவசாயத்துறை சார்பில் மண்புழு உரம் தயாரிப்பு
பயிற்சி முகாம் நடந்தது.
பிச்சம்பட்டி ஊராட்சி தலைவர் பாண்டியன் தலைமை
வகித்தார். விவசாய உதவி இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். விவசாய
அலுவலர் செல்வி மண்புழுவின் அவசியம், மண்புழு தயாரிக்கும் முறைகள் பற்றி
பேசினார். உதவி விவசாய அலுவலர்கள் துரைவேல், பாண்டிதீபா, ரேணுகாதேவி,
விவசாயிகள் தங்கவேல், காளிவேல் பேசினர்.விவசாயி ராமசாமி நன்றி கூறினார்.