sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தந்தை, மகள் காரை ஏற்றி  கொலை; லாரி டிரைவருக்கு இரட்டை ஆயுள் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

/

தந்தை, மகள் காரை ஏற்றி  கொலை; லாரி டிரைவருக்கு இரட்டை ஆயுள் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை, மகள் காரை ஏற்றி  கொலை; லாரி டிரைவருக்கு இரட்டை ஆயுள் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

தந்தை, மகள் காரை ஏற்றி  கொலை; லாரி டிரைவருக்கு இரட்டை ஆயுள் தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : நவ 19, 2024 06:29 AM

Google News

ADDED : நவ 19, 2024 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்டம், கண்டமனுாரில் டீ கடை வைப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காரை ஏற்றி தந்தை, மகளை கொலை செய்த லாரி டிரைவர் ரமேஷ்குமாருக்கு 42, இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கண்டமனுார் ராமலிங்கபுரம் மேற்குத்தெரு செல்வராஜ் 50. டீ கடை உரிமையாளர். இதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் 42. இருவருக்கும் அதே ஊரில் பொது இடத்தில் டீ கடை வைப்பதில் முன் விரோதம் இருந்தது.

இதுகுறித்து ரமேஷ்குமார், அவரது உறவினர் திருமங்கலம் பி.அம்மாபட்டியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் முத்துமணி ஆகியோர் மீது கண்டமனுார் போலீசில் செல்வராஜ் புகார் அளித்தார். அதில், 'தன்னை டீக்கடை நடத்தக்கூடாது,'என அவர்கள் மிரட்டுவதாக கூறியிருந்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நடவடிக்கை எடுக்க கோரி தேனி கலெக்டர் ஆபீசில் தீக்குளிக்க முயன்ற செல்வராஜை கைது செய்தனர். அதன் பின் கண்டமனுார் போலீசார் ரமேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அவர்களிடையே மீண்டும் விரோதம் அதிகரித்தது.

இந்த முன்விரோதத்தில் 2018 ஜன 2ல் ரமேஷ்குமார் ரோட்டோர டீக்கடையில் அமர்ந்திருந்த இருந்த செல்வராஜ், அவரது மகள் அபிராமி, மகன் அன்புச்செல்வன், ஆகியோர் மீது காரை ஏற்றினார். பலத்த காயம் அடைந்த செல்வராஜ், அபிராமி சம்பவ இடத்தில் பலியாகினர். அன்புச்செல்வன் காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

கண்டமனுார் போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர். இவ் வழக்கு தேனி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் மாவட்ட தலைமை வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார்.

ரமேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மகனை கொலை முயற்சியில் ஈடுபட்டதால் மூன்றாண்டுகள் சிறை, அபராதம் ரூ.15 ஆயிரம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us