sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 மாவட்ட அரசு மருத்துவமனையில் நிலவேம்பு விநியோகத்தில் சுணக்கம்

/

 மாவட்ட அரசு மருத்துவமனையில் நிலவேம்பு விநியோகத்தில் சுணக்கம்

 மாவட்ட அரசு மருத்துவமனையில் நிலவேம்பு விநியோகத்தில் சுணக்கம்

 மாவட்ட அரசு மருத்துவமனையில் நிலவேம்பு விநியோகத்தில் சுணக்கம்


ADDED : டிச 11, 2025 05:46 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் நிலவேம்பு கஷாயம் பெயரளவில் குறைவாக காய்ச்சி வைப்பதால் பலரும் கிடைக்காமல் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

மருத்துவமனைக்கு தினமும் 1200 க்கும் அதிகமான வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் ஏராளமானோர் காய்ச்சல், சளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள சித்தா பிரிவில் கடந்தாண்டு டிச., ஜன., மாதங்களில் குளிர் காலம் என்பதால் 10 லிட்டர் கேனில், தினமும் இரு முறை காலை 8:00 மணி முதல், மதியம் 12:00 வரை நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், டெங்கு பாதிப்பை தடுக்கவும் 16 மூலிகைகள் கலந்த கபசுரகுடிநீர், 10 மூலிகைகள் கலந்த நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. கஷாயம் குடிப்பதற்கு 5 முதல் 10 சில்வர் டம்ளர்களும் பார்சல்களாகவும், நிலவேம்பு கஷாயம் பொடி பாக்கெட்டும் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர்.

இதனை பராமரிக்க உதவியாளர்கள் உள்ளனர். தற்போது சிறிய பாத்திரத்தில் நிலவேம்பு கஷாயம் காய்ச்சி அறைக்குள் வைத்துக் கொள்கின்றனர். யாரவது அறைக்குள் சென்றாலும் பணியாளர்கள் அலட்சியம் காட்டுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் வழக்கமான நடைமுறையில் வெளியே வைத்து கஷாயம் வழங்குவதற்கும் அதனை குடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். -






      Dinamalar
      Follow us