sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் - ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

/

கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் - ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் - ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்

கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசல் - ஆக்கிரமிப்புகள் அகற்ற வலியுறுத்தல்


ADDED : நவ 28, 2024 06:07 AM

Google News

ADDED : நவ 28, 2024 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் மெயின் பஜாரில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலுார் ராஜாங்கம் சிலையிலிருந்து பள்ளிவாசல் வரையுள்ள மெயின்பஜார் கடைகள் அதிகம் நிறைந்த பகுதியாகும். தனியார் மருத்துவமனைகள், ரத்தப் பரிசோதனை நிலையம், ரைஸ் மில், மருந்துகடைகள், வங்கிகள் ஆகியவை அதிகம் உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகம். காலை, மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் இப்பகுதியில் அதிகமாக கடந்து செல்கின்றன.

வரைமுறையின்றி டூவீலர்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பள்ளி வாகனங்கள் திருப்ப முடியாமல் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. 30 அடி அகலம் உள்ள ரோடாக இருந்த மெயின் பஜார் தற்போது 10 அடி அகலம் மட்டுமே உள்ளது.

அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நடந்த செல்ல நடைபாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us