ADDED : ஆக 17, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டியில் பா.ஜ., சார்பில் மறைந்த நாகலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு மலர் அஞ்சலியும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலியும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆண்டிபட்டி வைகை ரோடு சந்திப்பில் மறைந்த கவர்னர் இல.கணேசன், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டி, ஆண்டிபட்டி நகர் தலைவர் மனோஜ்குமார், நகர பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், நகர் துணை தலைவர் நீலமணி, மூத்த நிர்வாகிகள் வழக்கறிஞர் குமார், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.