/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
எம்.சாண்ட் திருட்டு இருவர் மீது வழக்கு
/
எம்.சாண்ட் திருட்டு இருவர் மீது வழக்கு
ADDED : நவ 20, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் அரசு 23.
குள்ளப்புரம் பிரிவு அருகே டிராக்டரில் 1 யூனிட் எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.
ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் 'பாஸ்' இல்லாமல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக, திருட்டு மணல் என தெரிய வந்தது.
இதற்கு உடந்தையாக இருந்த ஜி.டி.ஆர்., குவாரி மேலாளர் சங்கரலிங்கம் 35. உட்பட இருவர் மீது ஜெயமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-

