ADDED : டிச 30, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை மந்திச்சுனை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசுக்கு சொந்தமான இடம் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த இடத்தில் பொது நூலகம் கட்டுவதற்கு திட்ட மிடப்பட்டது.
தனிநபர் ஆக்கிரமிப்பால் நூலகம் கட்டுமான பணியை துவக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதனை கண்டித்து மந்திச்சனையை சேர்ந்த பொதுமக்கள் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

