sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்

/

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்

பயன்பாடு இன்றி உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்


ADDED : மார் 17, 2025 08:02 AM

Google News

ADDED : மார் 17, 2025 08:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி, : போடி அருகே ராசிங்காபுரத்தில் ரூ.7.88 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி உள்ளது.

போடி ஒன்றியம் ராசிங்காபுரம் ஊராட்சியில் 1,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் ஆகிறது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஒரு குடம் தண்ணீர் ஒரு ரூபாய்க்கு விநியோகம் செய்யும் வகையில், முத்தாலம்மன் கோயில் அருகே 5 ஆண்டுகளுக்கு முன், மத்திய நிதிக் குழு திட்டத்தின் கீழ் ரூ.7.88 லட்சம் மதிப்பில் சோலார் சிஸ்டம் மூலம் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டும் செயல்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் மாறி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us