sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

உத்தமபாளையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையால் அவதி 'அம்ரூத்' பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

உத்தமபாளையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையால் அவதி 'அம்ரூத்' பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

உத்தமபாளையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையால் அவதி 'அம்ரூத்' பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

உத்தமபாளையத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையால் அவதி 'அம்ரூத்' பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : செப் 25, 2024 06:15 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம், : உத்தமபாளையத்தில் 15 நாட்களுக்கு ஒருநாள் குடிநீர் சப்ளை செய்வதால் 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ் ரூ.29.60 கோடி மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 32 ஆயிரம் மக்கள் தொகை உள்ளனர். குடிநீர் இணைப்புகள் 4500ம், 10,70 லட்சம் கொள்ளவு கொண்ட 7 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளன. இருந்த போதும் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் அபிவிருத்தி பணிகள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே, 'அம்ருத் 2.0.' திட்டத்தின் கீழ் ரூ.29.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா 16 மாதங்களுக்கு முன் துவங்கியது. அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாற்றில் புதிய உறைகிணறு அமைப்பது, 11 ஆயிரத்து 503 மீட்டர் நீளத்திற்கு மெயின் பகிர்மான குழாய் பதித்தல், குடிநீர் விநியோக பைப் லைன் 60, 668 மீட்டர் நீளத்திற்கு அமைக்க திட்டமிடப்பட்டது. 25.20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 13 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் புதிதாக 5586 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கவும் பேரூராட்சி முடிவு செய்துள்ளது.

ஆனால் பணிகள் துவங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் குடிநீர் விநியோகம் 15 நாட்களுக்கு ஒரு முறை நடக்கிறது. அம்ரூத் பணிகள் நிறைவு பெறாததால் அரசிடம் இருந்து வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் கூட பெற முடியாத அவல நிலை உள்ளது. எனவே பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us