/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணை நீர்மட்டம்: 69.13 அடியாக நிலை நிறுத்தம்
/
வைகை அணை நீர்மட்டம்: 69.13 அடியாக நிலை நிறுத்தம்
ADDED : அக் 22, 2025 07:51 PM
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு வரத்து தொடர்கிறது. வைகை அணை நீர்மட்டம் 69.13 அடியாக நிலை நிறுத்தி வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கிறது. தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அக்.,18ல் 62.66 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று முன் தினம் மதியம் ஒரு மணிக்கு 69 அடியாக உயர்ந்தது. அணை உயரம் 71 அடி. இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
வரத்திற்கு ஏற்ப நீரை வெளியேற்றி அணை நீர்மட்டம் கடந்த இரு நாட்களாக 69.13 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2:00 மணிக்கு அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3630 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து வைகை ஆற்றின் வழியாக 2281 கன அடியும், பாசன கால்வாய் வழியாக 1280 கன அடியும் திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.