sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கட்டட வாடகையுடன் ஜி.எஸ்.டி.,வரி திரும்ப பெற கோரி நாளை கடையடைப்பு பல்வேறு வணிக, வியாபார சங்கங்கள் பங்கேற்பு

/

கட்டட வாடகையுடன் ஜி.எஸ்.டி.,வரி திரும்ப பெற கோரி நாளை கடையடைப்பு பல்வேறு வணிக, வியாபார சங்கங்கள் பங்கேற்பு

கட்டட வாடகையுடன் ஜி.எஸ்.டி.,வரி திரும்ப பெற கோரி நாளை கடையடைப்பு பல்வேறு வணிக, வியாபார சங்கங்கள் பங்கேற்பு

கட்டட வாடகையுடன் ஜி.எஸ்.டி.,வரி திரும்ப பெற கோரி நாளை கடையடைப்பு பல்வேறு வணிக, வியாபார சங்கங்கள் பங்கேற்பு


ADDED : நவ 28, 2024 05:54 AM

Google News

ADDED : நவ 28, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: வணிக கட்டடங்களுக்கு வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியை திரும்ப பெற கோரி நாளை மாவட்டத்தில் வியாபாரிகள், வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்ட வியாபாரிகள் சங்கம், மாவட்ட மொத்தம், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இச்சங்கங்களின்மாவட்டத் தலைவர்கள் ஆனந்தவேல், நடேசன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, வணிக பயன்பாட்டில் உள்ள கட்டடங்களுக்கு செலுத்தப்படும் வாடகையுடன் 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவ.29ல் ஒரு நாள் அடையாள முழுநேர கடையடைப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடையடைப்பில் மாவட்ட வைகை பருப்பு வியாபாரிகள் சங்கம், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்கம், சிறு பலசரக்கு வியாபாரிகள் சங்கம், அரிசி வியாபாரிகள் சங்கம் இணைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், அனைத்து வணிக சங்கங்களின் கூட்டமைப்பும் கூட்டத்தில் 18 சதவீத வரியை திரும்ப பெற தீர்மானம் நிறைவேற்றி, இதனை கண்டித்து நவ.,29ல் கடையடைப்பு நடத்துகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீத்தாராமனுக்கு இமெயில் மூலம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகஅமைச்சர் பதில் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us