/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்
/
காட்சிப்பொருளான போக்குவரத்து சிக்னல்
ADDED : ஜன 08, 2024 05:17 AM

போடி : போடி பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் 15 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.
போடி காமராஜ் பஜார், தேவாரம் ரோடு, குப்பிநாயக்கன்பட்டி, பெரியாண்டவர் ஹைரோடு இணையும் நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது. காலை, மாலையில் பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிக அளவில் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சென்றனர். இதனால் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்கும் வகையில் 15 ஆண்டுகளுக்கு முன் பாதுகாப்பு கூண்டோடு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டன. மின் இணைப்பும் பெறப்பட்டன. துவங்கிய 6 மாதங்கள் மட்டுமே போலீஸ், போலீஸ் நண்பர்கள் குழு மூலமாக செயல்பட்டன. அதன் பின் செயல் படுத்த போலீஸ் நிர்வாகம் முன் வராததால் தற்போது பயன்பாடு இன்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள், மக்களும் சிரமப்படுகின்றனர். சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டுவர போடி டி.எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.