sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : நவ 28, 2024 02:55 AM

Google News

ADDED : நவ 28, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் பெய்த மழையால் நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்தது.

கடந்த சில நாட்களாக மழையின்றி அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி தேக்கடியில் 8.4 மி.மீ., பெரியாறில் 10 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 190 கன அடியாக இருந்து நீர்வரத்து 608 கன அடியாக அதிகரித்தது. தமிழகப் பகுதிக்கு 822 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.75 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நேற்று பகல் முழுவதும் மேகமூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லை. பருவமழை தீவிரமடைந்தால் மட்டுமே நீர்மட்டம் உயரும்.






      Dinamalar
      Follow us