sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கொட்டகுடி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

/

கொட்டகுடி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

கொட்டகுடி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா

கொட்டகுடி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா


ADDED : அக் 07, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி கொட்டகுடி ஆற்றின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதால் மழைக் காலங்களில் மழைநீர் சீராக செல்ல வழி இன்றி பாதை குறுகலாகி உள்ளது.

இதனால் கண்மாய்களில் மழைநீர் முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

போடி மேலச்சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் உட்பட சுற்றியுள்ள கிராம மக்கள் விவசாய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா, குரங்கணி மலைப் பகுதியில் பெய்யும் மழை நீரானது குரங்கணி, கொட்டகுடி ஆற்றில் துவங்கி தேனி கொட்டகுடி ஆறு வரை செல்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பதோடு, வறண்டு கிடந்த கிணறுகள், கண்மாய்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. குரங்கணி, கொட்டகுடி, முந்தல் ரோட்டில் உள்ள ஆற்றுப் பகுதியில் இருந்து போடி இரட்டை வாய்க்கால், அணைப்பிள்ளையார் அணை, வேட்டவராயர் கருப்பசாமி கோயில், கோடங்கிபட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும். இந்நிலையில் கொட்டகுடி ஆற்றுப் பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் ஆக்கிரமித்து தென்னை, இலவம் மரங்கள் உள்ளிட்ட விளை நிலங்களாக மாற்றி உள்ளனர். ஆக்கிரமிப்பால் மழைநீர் சீராக செல்ல முடியாத நிலையில் பாதை குறுகலாகி உள்ளது. மழைநீர் வரும் பாதையை தடுப்பு, மணல் மேடுகள் அமைத்தும், கண்மாய்களுக்கு செல்லும் நீரை சிலர் மாற்று பாதையில் திருப்பி விட்டு உள்ளனர். இதனால் ஆற்று நீர் கண்மாய்களுக்கு எளிதாக செல்ல முடியாதது ஏற்பட்டு உள்ளது. இதோடு மேலச்சொக்கநாதபுரம் சங்கரப்பன் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய்களில் மழை நீரை முழுவதும் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் குரங்கணியில் இருந்து கொட்டகுடி ஆறு முடியும் பகுதி வரை ஆற்றின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us