/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பன்னீர் திராட்சையில் ஒயின் தயாரிப்பு ஆலை துவக்கப்படுமா: கம்பம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
/
பன்னீர் திராட்சையில் ஒயின் தயாரிப்பு ஆலை துவக்கப்படுமா: கம்பம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
பன்னீர் திராட்சையில் ஒயின் தயாரிப்பு ஆலை துவக்கப்படுமா: கம்பம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
பன்னீர் திராட்சையில் ஒயின் தயாரிப்பு ஆலை துவக்கப்படுமா: கம்பம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
ADDED : ஜன 22, 2024 05:57 AM

கம்பம் பள்ளத்தாக்கில் திராட்சை அதிக பரப்பில் சாகுபடியாகிறது. ஆண்டிற்கு 3 அறுவடை நடைபெறுவதால் ஆண்டு முழுவதும் திராட்சை கிடைக்கும் பகுதியாக உள்ளது. கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையும், ஒடைப்பட்டி பகுதியில் பன்னீர், விதையில்லா திராட்சையும் சாகுபடியாகிறது.
திராட்சைக்கு உரிய விலை கிடைப்பதில் பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. ஒயின் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 15 ஆண்டுகளுக்கு முன் ஆனைமலையன்பட்டியில் அமைக்கப்பட்டது. இந்த ஒயின் தொழிற்சாலையால் திராட்சை விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.
தொழிற்சாலை கொள்முதல் செய்வதும் இல்லை. ஆண்டிற்கு ஒரு முறை கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்வார்கள்.
கம்பம் பகுதியில் விளையும் 'மஸ்கட்' எனும் பன்னீர் திராட்சையை மகாராஷ்டிரா, நாசிக் நகரில் 300 ஏக்கரில் சாகுபடி செய்து அங்கு ஒயின் தயாரிக்கின்றனர். இந்திய ஏற்றுமதியில் தற்போது 40 சதவீதம் பன்னீர் திராட்சை ஒயின் தயாரிப்பிற்காக விற்பனையாகிறது. இதில் ஆல்கஹால் 7.5 சதவீதமாக அதில் உள்ளது. இதற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மஸ்கட்டோ (Moscato Sparkling white wine) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அதே நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு கம்பம் பகுதியில் பன்னீர் திராட்சையில் இருந்து ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க முன்வர வேண்டும்.
இந்த ஒயினுக்கு கலர் தேவை இல்லை. இனிப்பு விபரங்களை மட்டும் பார்த்தால் போதும். அதற்கான தொழில்நுட்பங்களை ஆனைமலையான்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையம் வழங்கும்.
எனவே திராட்சை விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், உற்பத்தி செய்யப்படும் பழங்கள் வீணாகாமல் பயன்படுத்தவும் ஒயின் தொழிற்சாலை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.