ADDED : ஏப் 16, 2025 08:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அன்னஞ்சி காளியம்மன் கோயில் தெரு கவுசல்யா 19. இவரது பெற்றோர் இறந்ததால் பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் கவுசல்யா, அதேப் பகுதியை சேர்ந்த கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து 10 மாத குழந்தை உள்ளது. கவுசல்யா 5 நாட்களாக அல்லிநகரத்தில் உள்ள பெரியப்பா மகன் சுப்பிரமணியன் வீட்டில் இருந்து வந்தார். கவுசல்யாவின் கணவர் கார்த்திக் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்குவந்தார். பின் கவுசல்யா துாக்கிட்டுதற்கொலை செய்தார். அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.