ADDED : செப் 20, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பெரியகுளம் பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் சீனிவாசன்43, மனைவி செல்வராணி32.
இவரது தங்கை ஹேமலதா, உறவினர் புனிதா49 ,ஆகியோர் திருவண்ணாமலை சென்று விட்டு காரில் ஊர் திரும்பினர். காரை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் தேவராஜ்29,ஓட்டினார். திண்டுக்கல் - திருச்சி ரோடு சீலப்பாடி அருகே நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு வந்தபோது ரோட்டோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது.
இதில் புனிதா இறந்தார். மற்றவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.