sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்

/

2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்

2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்

2013க்கு பின் பிறந்தவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் பிறப்பு சான்றிதழ் கம்ப்யூட்டரில் சரிபார்க்கும் பணி தீவிரம்


ADDED : செப் 07, 2025 01:32 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:தமிழகத்தில் 2013 முதல் 2017 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் வழங்க சுகாதாரத்துறையினர் நடவடி க்கை எடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நகராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

2018க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும் பிறப்பு சான்றிதழ் தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. அதற்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ் அல்லது ஆங்கிலம் என ஏதாவது ஒரு மொழியில் வழங்கப்படுகிறது. இதனால் ஒரு குழந்தைக்கு தனிதனியாக இரு மொழிகளில் சான்றிதழ் பெறும் சூழல் நிலவுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '2013 முதல் 2017 வரை பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் சாப்ட்வேரில் பதிவேற்றப்பட்டுள்ளது. அரசு பதிவேடுகளில் உள்ள விபரம் கம்யூட்டரில் சரியாக பதிவேற்றப்பட்டுள்ளதா என சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் 2013க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு இரு மொழியில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது,' என்றார்.






      Dinamalar
      Follow us