sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

/

படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்

படையப்பா யானையால் துாக்கத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்


ADDED : ஜூலை 03, 2025 12:22 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான குண்டுமலை எஸ்டேட் நியூ டிவிஷனில் இரவில் குடியிருப்பு பகுதியில் படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் தூக்கத்தை இழந்தனர்.

மூணாறு பகுதியில் வலம் வரும் காட்டு யானைகளில் வயது முதிர்ந்த படையப்பா ஆண் காட்டு யானை மிகவும் பிரபலம். இந்த யானை கடந்த ஒரு வாரமாக வாகுவாரை, காபிஸ்டோர், பாம்பன்மலை ஆகிய பகுதிகளில் முகாமிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குண்டுமலை எஸ்டேட் நியூ டிவிஷன் பகுதிக்கு வந்தது. அங்கு இரவில் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பா ஊமத்துரையின் வீட்டின் அருகில் உள்ள ஷெட், சொக்கத்தாய் என்பவது வீட்டின் மேல் கூரை, குடிநீர் குழாய்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. தவிர வீடுகளின் அருகில் இருந்த வாழைகளை தின்றது.

இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் நடமாடிய படையப்பாவை நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறையினர் அருகில் உள்ள காட்டிற்குள் விரட்டினர். இரவு முழுவதும் குடியிருப்பு பகுதியில் படையப்பா நடமாடியதால் தொழிலாளர்கள் அச்சத்தில் தூக்கத்தை இழந்தனர்.






      Dinamalar
      Follow us