ADDED : செப் 26, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மருந்தாளுனர்கள் தின விழா மருந்து கிடங்கு அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. மருந்து கிடங்கு அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
கல்லூரி முதல்வர் தேன்மொழி, நிலைய மருத்துவ அலுவலர் சிவகுமரன் உதவி மருத்துவ அலுவலர்கள், ஈஸ்வரன், மணிமொழி, நிர்வாக அலுவலர் கணேஷ்பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினர். மருந்தாளுனர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். தலைமை மருந்தாளுனர்கள் சண்முகராஜ், ராம்கைலாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மூர்த்தி நன்றி கூறினார்.