sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ரூ.60.82 லட்சம் மோசடி வாலிபர் சுற்றிவளைப்பு

/

ரூ.60.82 லட்சம் மோசடி வாலிபர் சுற்றிவளைப்பு

ரூ.60.82 லட்சம் மோசடி வாலிபர் சுற்றிவளைப்பு

ரூ.60.82 லட்சம் மோசடி வாலிபர் சுற்றிவளைப்பு


ADDED : அக் 20, 2025 12:33 AM

Google News

ADDED : அக் 20, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பியை சேர்ந்த நபர், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரில், 'ஆன்லைன் வாயிலாக ஷேர் டிரேடிங் செய்து பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி, 60.82 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தேன்' என, தெரிவித்தார்.

சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணைக்கு பின், திருச்சூர் மாவட்டம், வடக்கேக்காடு அஞ்சூரைச் சேர்ந்த முனீர், 27, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:

2025 செப்., மாதம், 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, 'வீட்டிலிருந்த படியே ஷேர் டிரேடிங் செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம்' என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி, 'டிபாசிட்' தொகையாக, 60.82 லட்சம் ரூபாயை, முனீர் என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார்.

ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்று, அந்த பணத்தில், பெரிய தொகையை, அவரது திருச்சூர் பெரும்பிலாவு பகுதியில் உள்ள, மற்றொரு வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளது தெரிந்தது.

இவ்வழக்கு தவிர, கைதானவரின் இந்த வங்கிக்கணக்கு மீது குஜராத்திலும் இதுபோன்ற வழக்கு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. முனீர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us