sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சமூக ஆர்வலரை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மனு

/

சமூக ஆர்வலரை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மனு

சமூக ஆர்வலரை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மனு

சமூக ஆர்வலரை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மனு


ADDED : மே 07, 2024 11:20 PM

Google News

ADDED : மே 07, 2024 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி சம்பக்கடை தெருவை சேர்ந்தவர் பெர்டின் ராயன் 35.

திருநெல்வேலி மாநகராட்சி, உள்ளூர் திட்ட குழுமம், கனிமவளத் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் நடக்கும் முறைகேடுகள், ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்று வழக்கு தொடர்ந்து வந்தார்.

மே 4ம் தேதி காலையில் அவர் காரில் பேட்மிண்டன் பயிற்சிக்கு வந்தபோது மர்மநபர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். தலை, முதுகு, இரண்டு கைகள் உட்பட 6க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாள் வெட்டு காரணமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

அவருக்கு அலைபேசியில் தொடர்ந்து பேசி மிரட்டல் விடுத்த நபர்கள், அவர் வழக்கு தொடர்ந்ததால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் என நான்கு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடல் சார் மக்கள் நல சங்கமம் அமைப்பின் சார்பில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் சகாய இனிதா தலைமையில் மனு அளித்தனர்.

அதில் ' பெர்டின் ராயனைவெட்டிய கும்பலை போலீசார் கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் மீது இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டால் சமூகத்தில் யாரும் பிரச்சனைகளுக்காக போராட வரமாட்டார்கள் என்ற எண்ணம் நிலவும்' என குறிப்பிட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us