sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

துாய்மை பணியாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

/

துாய்மை பணியாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

துாய்மை பணியாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்


ADDED : ஆக 30, 2024 10:15 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் சுய உதவிக் குழு தூய்மை பணியாளர்கள் 523 பேருக்கு வேலை மறுக்கப்பட்டதால் மாநகராட்சி வளாகத்தில் இரவு தங்கினர். உணவுக்காக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இம்மாநகராட்சியில் 220 பேர் நிரந்தரத் தூய்மை பணியாளர்கள், ராம் அன் கோ எனும் தனியார் நிறுவனத்தின் மூலம் 600 பேர், சுய உதவிக் குழுக்கள் மூலம் 523 பேர் தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

கடந்த 18ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தின் மீதுள்ள மரக்கிளையை வெட்டிய சுய உதவிக்குழு தூய்மை பணியாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் தவறி விழுந்து பலியானார். அவருக்கு இழப்பீடு தொகை கோரி போராட்டத்தை ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கடந்த 24ம் தேதி முதல் சுய உதவி குழு தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் வேலை இல்லை எனக் கூறி அனுப்பப்பட்டனர்.

எனவே பணியாளருக்கு வேலை வழங்க கோரி நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலை முதல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரையிலும் மேயர் ராமகிருஷ்ணன், கமிஷனர் சுகபுத்ரா பணியாளர்களை சந்திக்க வரவில்லை. எனவே மாநகராட்சி வளாகத்தில் பணியாளர்களின் உணவுக்காக கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தலைமை வகித்த மோகன் கூறுகையில்'' மாநகராட்சியில் ஒப்பந்த பணி மேற்கொள்ளும் ராம் அன் கோ நிறுவனத்தில் அவர்கள் ஒப்பந்தத்தில் கூறிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. இருப்பினும் முழு சம்பளம் வழங்கப்படுகிறது.

எனவேசுய உதவி குழு தூய்மை பணியாளர்களை ராம் அன் கோ வில் இணையும்படி மாநகராட்சி நிர்வாகம் வற்புறுத்தியது. அதற்கு மறுத்ததால் வேலை இல்லை என மறுக்கின்றனர்.எங்கள் போராட்டத்தின் கோரிக்கையை கேட்க மேயரோ ,கமிஷனரோ வரவில்லை. மாநகராட்சி வளாகத்திலேயே தங்க உள்ளோம். இனி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்






      Dinamalar
      Follow us