ADDED : பிப் 20, 2025 01:49 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை கிருஷ்ணமூர்த்தி 77.
நேற்று காலை மனைவி லலிதா 70,வுடன் செங்கோட்டை -ஈரோடு ரயிலில் செல்ல திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர். அந்த ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தில் வருவதாக இருந்ததால் முதல் பிளாட்பாரத்தில் இருந்து அங்கு செல்ல முயற்சித்தனர். அப்போது லிப்ட், நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. இதனால் மனைவியை படிக்கட்டுகள் வழியே ஏறி வரும்படி கூறியவர் தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயற்சித்தார்.
திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்வதற்காக தயரான ரயில் பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்கு பின்னோக்கி வந்தது. இதில் அடிபட்டு கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தினமும் அதிக நிதி வருவாய் உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றான திருநெல்வேலியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நேரங்களில் லிப்ட், நகரும் படிக்கட்டுகள் வேலை செய்வதில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. நேற்று ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

