ADDED : ஜூலை 28, 2026 01:35 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி:-: திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ரெங்கசமுத்திரத்தைச் சேர்ந்த பட்டியல் இன மாணவர் பிரவீன் 17, கட்டையால் தாக்கப் பட்டார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவான மேலஅரியகுளத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஏற்கனவே நாங்குநேரி வட்டாரத்தில் மாணவர்கள் இடையே ஜாதி ரீதியான மோதல்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
