/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு
/
கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு
கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு
கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு
ADDED : நவ 04, 2025 02:07 AM
திருநெல்வேலி:  திருநெல்வேலியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புகுந்து சேர்களை வீசி தாக்குதல் நடத்திய கல்குவாரி ஆதர வாளர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 25க்கும்  மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.
எனவே கல்குவாரிகள் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தலைமையில் நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திடீரென உள்ளே புகுந்த 25க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக் நாற்காலிகளை வீசி ரகளை செய்தனர்.
இதில் வழக்கறிஞர் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறப்போர் இயக்கத்தினர் ஆன்லைனில் புகார் அனுப்பினர். எனவே சம்பவ இடத்தில் இருந்த ஏட்டு அளித்த புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர்களின் ஆதர வாளர் வினோத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

