sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு

/

கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு

கூட்டத்தில் சேர்களை வீசி தாக்கிய 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 04, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் புகுந்து சேர்களை வீசி தாக்குதல் நடத்திய கல்குவாரி ஆதர வாளர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் 25க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதனால் விவசாயம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.

எனவே கல்குவாரிகள் குறித்து அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் தலைமையில் நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திடீரென உள்ளே புகுந்த 25க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக் நாற்காலிகளை வீசி ரகளை செய்தனர்.

இதில் வழக்கறிஞர் சுரேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறப்போர் இயக்கத்தினர் ஆன்லைனில் புகார் அனுப்பினர். எனவே சம்பவ இடத்தில் இருந்த ஏட்டு அளித்த புகாரின் பேரில் கல்குவாரி உரிமையாளர்களின் ஆதர வாளர் வினோத்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us